வியாழன், 7 ஜனவரி, 2016

சர்வதேச துப்பாக்கி சுடுதல்: இந்திய வீராங்கனை அபூர்வி சண்டிலா உலக சாதனைசுவிஸ் கோப்பை
கிராண்ட்பிரி துப்பாக்கி சுடுதல் போட்டி அங்குள்ள சாவ்ஜோவில் நடந்தது. இதில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பந்தயத்தில் இந்திய வீராங்கனை அபூர்வி சண்டிலா அபாரமாக செயல்பட்டு 211.2 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கம் வென்றதுடன், புதிய உலக சாதனையும் படைத்தார். இதற்கு முன்பு ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற சீன வீராங்கனை யி சிலிங் 211 புள்ளிகள் குவித்ததே இந்த பந்தயத்தில் உலக சாதனையாக இருந்து வந்தது. இதனை அபூர்வி சண்டிலா தகர்த்து புதிய சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். இந்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு ஏற்கனவே தகுதி பெற்று விட்ட ஜெய்ப்பூரை சேர்ந்த 23 வயதான அபூர்வி சண்டிலா உலக சாதனை படைத்ததன் மூலம் தனது ஒலிம்பிக் பதக்க நம்பிக்கை அதிகரித்து இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக